பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலகதத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்!

சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு பட்டிருப்பு களுவாஞ்சிகுடி நன்னடத்தை அலுவலகதத்தின் ஏற்பாட்டில் களுதாவளை கலாசார மண்டபத்தில் இன்று(01.10.2016)ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் நன்னடத்தை அலுவலகதத்தின் பொறுப்பதிகாரி மா.வரதராஜன் தலைமையில் ஆரம்பமானது இன் நிகழ்விற்கு  அதிசிறப்புவிருந்தினராக வைத்தியர்  மா.திருகுமார் மகபேற்று வைத்தியநிபுணர் சிரேஸ்ர விரிவுரையாளர் கி.ப  சிரேஸ்ர நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகுமார்; களுதாவளை மகாவித்தியலயத்தின் அதிபர் காப்தீபன் மற்றும் மேலும் பலரும் சிறுவர் தின விழாவில் கலந்து கொண்டனர்.


இன் நிகழ்வின் முதல் நிகழ்வான அதிதிகளை பன்ற் வாத்தியத்துடன் வரவேற்று அழைத்து வரப்படனர். பின்னர் மங்கல விளக்கேற்றல் இறைவணக்கத்தினை தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை சக்தி இல்ல மாணவியர் ஆற்றுகைப்படுத்தினர் அதனை தொடர்ந்து தலைமையுரை நன்னடத்தை அலுவலகதத்தின் பொறுப்பதிகாரி மா.வரதராஜன் நிகழ்த்தினார். சிறப்பு அதிதிகளின் உரை வரிசையில் சிரேஸ்ர நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகுமார் மற்றும் களுதாவளை மகாவித்தியலயத்தின் அதிபர் காப்தீபன் உரையாற்றினர். அதிசிறப்புவிருந்தினராக வைத்தியர்  மா.திருகுமாரும் உரையாற்றினார்.

அத்துடன் பல்வேறு பட்ட கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் க.பொ.த (சா.த) மற்றும் உயர்தரத்தில் சாதனை படைத்த பட்டிருப்பு கல்வி வலய மணவர்களுக்கு பரிசில் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கவிடயம்