(லியோன்)
பால்நிலை பழமை வாதத்தை ஒழித்தல் எனும் கருப்பொருள் அடங்கிய ஒரு நாள்
பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது
.
த கிராஸ் ரூடேட் அமைப்பினால் இலங்கையில் 14 மாவட்டங்களில்
எச் ஐ வி பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தடையாக உள்ள கலங்கப்பாடுகள் , பால்நிலை
நோக்கிய வன்முறை ,இலங்கையில் இணையத்தினூடான சுரண்டல் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி பட்டறைகள்
நடத்தப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் பால்நிலை பழமை வாதத்தை ஒழித்தல் எனும் கருப்பொருளில்
மட்டக்களப்பு மாவட்ட தேவை நாடும் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு நாள் பயிற்சி
பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .
எச் ஐ வி பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தடையாக உள்ள கலங்கப்பாடுகள் ,
பால்நிலை நோக்கிய வன்முறை ,இலங்கையில் இணையத்தினூடான சுரண்டல் வன்முறைகள் போன்ற
கருப்பொருளில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட தேவை நாடும் மகளீர் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்
சங்கீதா தர்மரஞ்சன் ஒழுங்கமைப்பில்
நடைபெற்ற பயிற்சி பட்டறையில்
வளவாளர்களாக த கிராஸ் ரூடேட் அமைப்பின் ஹன்ஸ் பில்லிமொறி , தாரணி ஞானபிரகாசம் , பாலித
விஜய பண்டார ஆகியோர் கலந்துகொண்டதுடன்
இந்த பயிற்சி பட்டறையில் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறிக்கான மாணவர்கள் ,
மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் ,ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்