(லியோன்)
துறை நீலாவணை தெற்கு -1
மற்றும் தெற்கு வடக்கு கிராம பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் மாபெரும் வியாபாரச்
சந்தையும் களியாட்ட நிகழ்வும் துறை
நீலாவணையில் நடைபெற்றது
மட்டக்களப்பு அம்கோர் நிறுவன நிதியுதவியின் கீழ் துறை நீலாவணை தெற்கு -1
மற்றும் தெற்கு வடக்கு கிராமத்தில்
இயங்கிவரும் கிராம வாழ்வாதாரக் குழுக்களின் ஏற்பாட்டில் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வலு
சேர்க்கும் வகையில் பெண்
சுயதொழில் முயற்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி பொருட்களை விற்பனை
செய்யும் மாபெரும் வியாபாரச் சந்தையும் களியாட்ட நிகழ்வும் மட்டக்களப்பு துறை நீலாவணை பொது
விளையாட்டு மைதானத்தில் (22) பிற்பகல் ஆரம்பமானது.
இக்
கிராமத்தில் நலிவுற்ற பெண்களின் தொழில்
முயற்சியாளர்களை வலுவூட்டும் வகையில் அவர்களை
ஊக்குவித்து, அவர்களது உற்பத்திப்
பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் இந்நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்விப்
பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் , மட்டக்களப்பு அம்கோர் நிறுவன திட்ட முகாமையாளர் டி
.சிவயோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு
வியாபார சந்தையினை ஆரம்பித்து வைத்தார்கள் .
நிகழ்வில் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் , கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் , கிராம வாழ்வாதாரக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
இந்த
வியாபாரச் சந்தையும் களியாட்ட நிகழ்வும் இரண்டு நாட்கள்
நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .