புகையிரதத்தில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்

(லியோன்)

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கடுகதி புகையிரதத்தில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு திராய்மடு  4 ஆம்  குறுக்கு  வீதியை சேர்ந்த தங்கராஜா சதாகரன் (35வயது) இரண்டு  பிள்ளைகளின்  தந்தை ஒருவரே   இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.   .


இவரது மரணம்  தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்..