(லியோன்)
மட்டக்களப்பு சத்துருகொண்டான் பகுதியில் (12) மாலை பெண் ஒருவரின்
தாலிக்கொடியினை கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கியில் கடமை புரியும்
சமுர்த்தி உத்தியோகத்தார் ( திருமதி சாந்தலிங்கம் ஜெயபதி ) கடமை முடிந்து
மாலை வீடு செல்லும் வழியில் கொள்ளையர்கள் அவரின் ( 5 ½
பவுண்) சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான
தாலிக்கொட்டியினை அறுத்து சென்றுள்ளதாக
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட சத்துருகொண்டான்
பகுதியில் (12) மாலை 04.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு
வருகிறனர்