(லியோன்)
மட்டக்களப்பு மாநகர சபையினால் திருப்பெருந்துறை
பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நிறுத்தக்கோரி திருப்பெருந்துறை
பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் .
இந்த நிலையில்
இதனை தடை செய்யக்கோரி கிராம
மக்களினால் கடந்த 30.08.2017 புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்
தாக்கல் செய்தனர்
திருப்பெருந்துறை கிராம மக்களினால் தாக்கல்
செய்யப்பட மனுவை 31.08.2017 வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொன்ண்ட மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற நீதிபது மாணிக்கவாசகர் கணேசராஜா மட்டக்களப்பு மாநகர சபையினால்
திருப்பெருந்துறை பகுதியில் கொட்டப்படும்
குப்பைகள் மற்றும் கழிவுகளை இடை
நிறுத்துமாறு 14.09.2017 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு இடைக்கால
தடை உத்தரவினை பிறப்பித்திருந்தார்
இந்த நிலையில் இன்று (14) வழக்கினை
விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி
மாணிக்கவாசகர் கணேசராஜா குறித்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பிக்கப்படாத காரணத்தினால் குறித்த வழக்கினை
தொடர்ந்து 14 நாட்களுக்கு ஒத்தி
வைத்துள்ளார் .
குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 28 .09.2017 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது