மட்டக்களப்பு மாவட்ட குற்றச் செயல் ஆய்வு கூட வருடாந்த பரிசோதனை இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட குற்றச் செயல் நடந்த இடத்தினை பரிசோதிக்கும் ஆய்வு கூடத்திற்கான வருடாந்த பரிசோதனை மாவட்ட குற்ற தடவியல்
பொறுப்பதிகாரி கே .ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது
.
இந்த ஆய்வுகூட பரிசோதனை நிகழ்வில் இலங்கை குற்ற பதிவேட்டுக்கான
அத்தியட்சகர் பொலிஸ் அதிகாரி ஜகத் சேரன் கலந்துகொண்டு ஆய்வு கூட்டத்தினை
பார்வையிட்டார் .
மாவட்ட குற்றச் செயல் ஆய்வுகூட பரிசோதனை நிகழ்வுக்கு வருகை தந்த
இலங்கை குற்ற பதிவேட்டுக்கான அத்தியட்சகர் பொலிஸ் அதிகாரியை வரவேற்கும் நிகழ்வினை
தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்று
நாட்டிவைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மாவட்ட குற்ற தடவியல் பொலிஸ் உத்தியோகத்தர்கள்
கலந்துகொண்டனர்