(சரன்)
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய வருடாந்த கிருஷ்ண ஜெயந்தி பெருவிழாவாது நேற்று(12.09.2017) செவ்வாய்கிழமை இளையதம்பி மாணிக்கப்பிள்ளை குடும்பத்தினரின் உபயத்தில் மிகச்சிறப்பாக கோலாகல உறியடி திருவிழாவாக இடம்பெற்றது.
மேள வாத்தியங்கள் இசைக்க பக்தர்களின் கிருஷ்ண கான இசையுடனும் '"கோவிந்தா கோவிந்தா"" என்று எம் பெருமானை அழைத்து வழிபட்ட காட்சியும் கிருஷ்ணர் கம்பீரத்தோற்றத்துடன் வீதி உலா வந்ததும் சிறப்பாக இடம் பெற்றமையும் குறிப்பிடதக்கவிடயம் இவ் உற்ச்சவ நிகழ்வுகள் சிவஸ்ரீ.ச.மயூரவதன குருக்கள் தலமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது..