(லியோன்)
கிராமிய பொருளாதார
அலுவல்கள் பிரதி அமைச்சரின் பன்முகபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின்
வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வாழ்வாதார
உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .
இதற்கு அமைய கிராமிய
பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் பன்முகபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ்
மாமாங்கம் கடற்புறா மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக மீன்
வியாபாரிகளுக்கு சீருடைகளும் ,
சங்கத்திற்கான கதிரைகளும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு
மாமாங்கம் கடற்புறா மீன் வியாபாரிகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு
மாமாங்கம் கைத்தொழில் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் கிராமிய
பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம் எஸ் எஸ் அமீர் அலி , கிராமிய பொருளாதார
அலுவல்கள் அமைச்சின் இணைப்பாளர் ஜோன் , மாமாங்கம்
கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கே .தவராசா மற்றும் மாமாங்கம் கடற்புறா மீன்
வியாபாரிகளின் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .