மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவத்திற்கான மின் அலங்காரம் செய்வதற்கான கூறுவிலை கேள்வி கோரப்பட்டுள்ளது

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் உற்சவத்திற்கான மின் அலங்காரம் செய்வதற்கான கூறுவிலை கேள்வி கோரப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.23ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

இந்த நிலையில் 10 தினங்கள் ஆலயம் மற்றும் ஆலயத்தினை சூழவுள்ள பகுதிகளில் மின் அலங்கார வேலைகளை செய்வதற்கு கூறுவிலை கேள்வி கோரப்பட்டுள்ளது.

விரும்புவோர் தங்களது விலை மனு கோரல்களை எதிர்வரும் 05ஆம் திகதி காலை 10மணிக்கு முன்பாக வண்ணக்குமார்,ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம்,அமிர்தகழி,மட்டக்களப்பு என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

01)ரியுப்லை                                                                   நாள் ஒன்றுக்கு  ரூபா………...
02)போக்கஸ் லைட்                                                     நாள் ஒன்றுக்கு  ரூபா………...
03)குடையுடன் கூடிய கொச்சி லைட்                      நாள் ஒன்றுக்கு ரூபா………...
04)ஒலிபெருக்க செட்                                                   நாள் ஒன்றுக்கு ரூபா………...
05)கலர் மின்குமிழ்                                                       நாள் ஒன்றுக்கு ரூபா………...
06)மின்சார இயந்திரம்                                                நாள் ஒன்றுக்கு ரூபா………...
07) வொக்ஸ் செட்                                                         நாள் ஒன்றுக்கு ரூபா………...