கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு மட்டக்களப்பில் ஊடக நெறிமுறைசார் செயலமர்வு.

(சசி துறையூர்) கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு மட்டக்களப்பில் ஊடக நெறிமுறைசார் செயலமர்வு.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜம்பது இளைஞர் யுவதிகளுக்கு  இரண்டு நாள் வதிவிட ஊடக செயலமர்வு மட்டக்களப்பு சத்துறுக்கொண்டான் விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 04.07.2017 காலை 08.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகப்பிரிவு மற்றும் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலயமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

தரமான ஊடகவியலாளர்களையும், நெறிமுறை சார்ந்த ஊடக கலாச்சாரத்தையும் பேணும் நோக்கில்
இளைஞர்களுக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் விசு கருணாநிதி ,
சிரேஸ்ட ஊடகவியலாளரும்  சிரேஸ்ட அறிவீப்பாளருமான அஹாமட் என்.நஷீர் ,சிரேஸ்ட ஊடகவியலாளரும்  சிரேஸ்ட அறிவீப்பாளருமான யு.எல் மப்றுக், அறிவீப்பாளர் என். ஏ, எம்.யசிம் ஆகியோரினால் பயிற்சி மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.