(லியோன்)
தேசிய சாரணர் சங்கத்தின் தேசிய மகாநாடு (08 ,09) சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் மட்டக்களப்பில் நடைபெற்றது .
சாரணர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 வது
வருடத்தை சிறப்பிக்கும் வகையில் தேசிய மகாநாடு
மட்டக்களப்பு சாரணர் சங்கத்தின் தலைவரும் வலயக்கல்விப் பணிப்பாளருமான கே
.பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர
சபை மண்டபத்தில் நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை சாரணர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்
. இதனை தொடர்ந்து அதிதிகளினால் தேசிய , சாரண மாகான மாவட்ட கொடிகள் ஏற்றப்பட்டு
தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .
இந்த தேசிய சாரணர் மகாநாட்டின் பிரதான நிகழ்வான சாரனர்களுக்கு
தருசின்னம் அணிவிக்கும் நிகழ்வும் விசேட நிகழ்வாக தேசிய சாரணர்
இணையத்தளம் அங்குரார்ப்பன நிகழ்வும் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சாரணர் சங்கத்தின் பிரதம
விருந்தினர்களினால் 100 சாரனர்களுக்கு தருசின்னம் சின்னங்கள்
அணிவிக்கப்பட்டதுடன்
.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சாரணர் சங்க பிரதம ஆணையாளர்
பேராசிரியர் நிமால் டி சில்வா , விசேட
அதிதியாக இலங்கை சாரணர் சங்க தேசிய பயிற்சி ஆணையாளர் எம் .சரத் கொடகந்த
ஆராச்சி மற்றும் இந்த நிகழ்வில் அதிதிகளாக
வடக்கு கிழக்கு விசேட ஆணையாளர் எம் .எப் .எஸ் .முஹீட், மற்றும் இலங்கை
சாரண சங்க ஆசிரியர்கள் , சாரண மாணவர்கள் , மட்டக்களப்பு மாவட்ட சாரணர்கள் ,சிவில்உ அமைப்புக்களின்ட்ப பிரதிநிதிகள்ட என பலர் கலந்துகொண்டனர்.