புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

(லியோன்)

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய  பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு  விழா  (07) வெள்ளிக்கிழமை   நடைபெற்றது 


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய  பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வு  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில்  பாடசாலை  பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .

பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில்  சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு ,பிரதிபா விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்   

இந்த வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக   கல்வி  அமைச்சின் தேசிய பாடசாலைகளின் பணிப்பாளர் ஜயந்த விக்கிரமநாயக ,கல்வி  அமைச்சின் பிரதி கல்விப்பணிப்பாளர் எம் .ஆர் எம். இர்ஷான் , உவா பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் ஜெயரஞ்சனி சுதா மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள் மரியா ,கல்வி திணைக்கள அதிகாரிகள்  அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்