வேலையற்ற பட்டதாரிகளின் போராட்;டம் தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தவேண்டும்

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினை உரிய தரப்பினர் கவனம் செலுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 115வது நாளையும் தாண்டி இடம்பெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த போராட்டம் தொடர்ச்சியாக இரவு பகலாக இடம்பெற்றுவருகின்றது.

எனினும் தமது போராட்டம் உரிய தரப்பினரால் கவனத்தில் கொள்ளப்படாமல் இருப்பது கவலையளிப்பதாகவுள்ளதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதன் காரணமாக மன அழுத்தங்களுக்குள்ளாகிவருவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக நம்பிக்கையற்ற கருத்துகளும் செய்திகளும் வெளியாகிவருவதாகவும் நம்பிக்கையினை ஏற்படுத்தும் தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.