(லியோன்)
மட்டக்களப்பு
திமிலத்தீவு வாவி மீனவர்களுக்கான
தங்குமிட கட்டிடம் கையளிக்கும் நிகழ்வு .கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது .
கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ
திணைக்களத்தின் மூலம் அமுல்படுத்தப்படும் பங்குபற்றலுடன் கூடிய கரையோர வளைய
முகாமைத்துவ திட்டத்தின் கீழ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாவியைப் பேணும் நடவடிக்கை நடைமுறைப்
படுத்தப்பட்டு வருகின்றன .
பிரதான திட்டமாக மட்டக்களப்பு வாவி சுமார் 33 மில்லியன் ரூபா செலவில் எல்லைப்
படுத்தப்பட்டுள்ளதுடன் விழிப்புணர்வு நிகழ்வுகளும் . கண்டல் தாவரங்களை பாதுகாத்தல்
திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன .
இதன் ஒரு செயல்திட்டமாக வாவி முகாமைத்துவ
செயல்திட்டத்தின் கீழ் 0.8 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு திமிலத்தீவு வாவி மீனவர்களுக்கான கட்டப்பட்ட
மீனவ தங்குமிட கட்டிடம் கையளிக்கப்பட்டது
கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ
திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எ .கோகுலதீபன் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் டி .பாலமுகுந்தன் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள்
முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும்
திமிலத்தீவு கிராம சேவை உத்தியோகத்தர் , திமிலத்தீவு கிராம சமுர்த்தி
உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , திமிலத்தீவு வாவி மீன சங்க அங்கத்தவர்கள்,
திமிலத்தீவு கிராம பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் ,கலந்துகொண்டனர்