(லியோன்)
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக
மட்டக்களப்பு மாவட்டத்தில்
சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் , மட்டக்களப்பு மாநகர
சபை , மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் , மட்டக்களப்பு மாவட்ட
கல்வித்திணைக்களங்கள் , கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் அரச
அரசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் முகமாக கடந்த 29
ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிவாரண பொருட்களை சேகரிக்கும்
பணியில் ஈடுபட்டனர் .
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட
இந்த நிவாரண பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும்
பொருள் சேகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பொருட்கள் சேகரிக்கப்பட்டன .
அவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் பொதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட இரத்தினபுரி ,காலி மாவட்டங்களுக்கு அனுப்பி
அவ்வாறு சேகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் பொதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட இரத்தினபுரி ,காலி மாவட்டங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது