மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த
பாலர் பாடசாலை மாணவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது
.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் இல்ல
விளையாட்டு போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த ஆலய அருட்பணி ஆர்
கிரேஸ் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது
விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை வைத்திய நிபுணர் திருமதி ஏஞ்சலா, மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த ஆலய
முகாமை குரு அருட்பணி எஸ் .எஸ் .டெரன்ஸ் , மண்முனை வடக்கு முன்பிள்ளை பருவ
அபிவிருத்தி உத்தியோகத்தர் டி .மேகராஜ் ,பாடசாலை அதிபர் திருமதி . ஆர் .ஞானராஜன் , ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .
ஆரம்ப
நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து
வரப்பட்டனர்,
அதனை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது .
விளையாட்டு
நிகழ்வுகளில் மாணவர்களின் வினோத விளையாட்டு போட்டிகள் வினோத உடை போட்டி, மற்றும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத
விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
விளையாட்டு
போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது.