டெங்கு நோயினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்


(லியோன்)

டெங்கு  நோய் தாக்கம் காரணமாக  பாடசாலை மாணவி  ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். .


மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு  நோய் பெருக்கத்தை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார திணைக்களத்தினால் முன்னெடுத்து வருவதாக  நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்

கடந்த 09ஆம் திகதி  வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடசாலை மாணவி 13ஆம் திகதி செவ்வாய்கிழமை உயிரிந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்

குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கையில் குறித்த மாணவி  டெங்கின் நோய் தாக்கத்திற்கு உள்ளான நிலையிலேயே வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு லயன்ஸ் நிலைய வீதியை  சேர்ந்த செல்வி குணசேகரன் டிலக்சனா 15  வயதுடைய  பாடசாலை மாணவியே டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.