உதவிப்பணிப்பாளர் M.L.M.N நைறூஸ் இந்தியா பயணம்

(சசி துறையூர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜனாப் M.L.M.N நைறூஸ் நாளை சனிக்கிழமை அதிகாலை (06.05.2017) இந்தியா பெங்களுர்க்கு பயணம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுத்தமைக்காக  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பன்னிரண்டு பேர் அடங்கிய குழுவில் நாடளாவிய ரீதியில்  தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு உதவிப்பணிப்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயிற்சி மற்றும் அனுபவ பகிர்வு வேலைத்திட்டத்திற்க்காக  இந்த குழுவில் அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 11இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்களும் பயணமாகவுள்ளனர்.

இக் குழுவானது எதிர்வரும் 13.05.2017 அன்று இந்த பயிற்சி வேலைத்திட்டத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.