மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்ட தமிழ் மொழி தின போட்டிகள் இன்று காலை ஆரம்பமானது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டு தோறும் தமிழ் மொழி தின போட்டிகள் நடைபெறுகின்றன.
மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த தமிழ் மொழிதின போட்டியில் 39 பாடசாலைகளில் இருந்து சுமார் 600மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த போட்டிகளில் பேச்சு,நாடகம்,நாட்டியம்,இசை,பாடல்,கட்டுரை என 25 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் முதல் இடத்தினைப்பெறும் போட்டியாளர்கள் வலய மட்ட போட்டிகளில் பங்கபெற்றும் தகுதியை பெறுவார்கள் என மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டு தோறும் தமிழ் மொழி தின போட்டிகள் நடைபெறுகின்றன.
மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த தமிழ் மொழிதின போட்டியில் 39 பாடசாலைகளில் இருந்து சுமார் 600மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த போட்டிகளில் பேச்சு,நாடகம்,நாட்டியம்,இசை,பாடல்,கட்டுரை என 25 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் முதல் இடத்தினைப்பெறும் போட்டியாளர்கள் வலய மட்ட போட்டிகளில் பங்கபெற்றும் தகுதியை பெறுவார்கள் என மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் தெரிவித்தார்.