ஆண் மற்றும் பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியில் கிரான் பிரதேச கிழக்கு இளைஞர் கழகம் முதலாமிடம்.

(சசி துறையூர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 29 வது இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட , ஆண்  பெண் இருபாலாருக்குமான  கபடிப் போட்டியிலும் கிரான் பிரதேச கிழக்கு இளைஞர் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாமாங்கம் ஜங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான கபடிப் போட்டியில் இறுதிச் சுற்றில் வாழைச்சேனை கிண்ணையடி மற்றும் கிரான் பிரதே கிழக்கு இளைஞர் கழகங்கள் போட்டியிட்டன. இப்போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்திய கிரான் கிழக்கு இளைஞர் கழகம்  முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.

பெண்களுக்கான போட்டியில் கிரான் கிழக்கு இளைஞர் கழகமும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக அணியும் போட்டியிட்டன. இப்போட்டியில் கிரான் பிரதேச மகளிர் இளைஞர் கழகம் முதலாமிடத்தினையும், இரண்டாமிடத்தை  மண்முனை வடக்கு பிரதேச மகளிர் இளைஞர் கழக அணியினரும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.