மட்டக்களப்பு மாவட்ட கயிறுழுத்தல் போட்டியில் மண்முனை வடக்கு இளம்புயல் இளைஞர் கழகம் முதலாமிடம்.


(சசி துறையூர்)தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 29 வது இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட , ஆண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் மண்முனை வடக்கு இளம்புயல் இளைஞர் கழகம் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக சம்பியன் நாமத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த 29.04.2017 சனிக்கிழமை மாமாங்கம் ஜங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெற்ற  கயிறுழுத்தல் போட்டியிலேயே மண்முனை வடக்கு  இளம்புயல் இளைஞர் கழகம்  முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.

இப் போட்டியில் ஏறாவூர் நகர் பிரதேச  இளைஞர் கழகம்  இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.