பிரதேச ரீதியிலான இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லோ போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகம் சாதனை வெற்றி.
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலக மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் எல்லே போட்டி 30.04.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ரி. விமல்ராஸ் தலைமையில் ஈச்சந்தீவில் நடைபெற்ற போட்டியில் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகம் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப் போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிச்சுற்றில் நாவற்காடு பாரத் இளைஞர் கழகத்தை எதிர்த்து போட்டியிட்ட ஈச்சந்தீவு உதய சூரியன் இளைஞர் கழகம் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 30 பந்துகளுக்கு 11ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
வெற்றிபெற 12 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாவற்காடு பாரத் இளைஞர் கழகம் ஏழு வீரர்களை இழந்து மூன்று ஓட்டங்களை மாத்திரமே பெற்று இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டது.
வெற்றி பெற்ற ஈச்சந்தீவு உதய சூரியன் இளைஞர்கழகம் எதிர்வரும் 14.05.2017 கல்லடி சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ரீதியிலான போட்டியில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.