காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் ஏற்பாடுசெய்த மேதின நிகழ்வு

மட்டக்களப்பு காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச்சங்கம் ஏற்பாடுசெய்த மே தின நிகழ்வுகள் இன்று சிறப்பாக நடைபெற்றன.

தொழிலாளர் உரிமையினைவென்றெடுப்போம் என்னும் தொனிப்பொருளில் இதன்போது மேதின ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாரூக்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையம் முன்பாக மேதின ஊர்வலம் ஆரம்பமானதுடன் முச்சக்கர வண்டிகளின் பேரணியும் நடைபெற்றது.