தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச தொழிலாளர்தின நிகழ்வு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று உழைக்கும் வர்க்கத்திற்கு சார்பாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சர்வதேச தொழிலாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று பிற்பகல் 2.30மணியளவில் மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு பஸ் நிலையம் முன்பாக மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து பஸ் நிலையம் முன்பாக மாபெரும் மேதின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்ற.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் எஸ்.யோகவேள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்யின் உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம்,கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சி முக்கிஸ்தர்கள் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.