கல்லடி கடற்கரையில் கடலியற் பூங்கா திறந்துவைப்பு

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடலியற் பூங்கா இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகண முதலமைச்சர் நசீர் அஹமட், புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், அலிசாஹிர் மௌலானா, ஆகியோர் கலந்து கலந்து கொண்டானர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான ஜீ;க.pருஸ்ணப்பிள்ளை, சிப்லி பாருக், ஆகியோரும், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாசவும் கலந்து கொண்டார்.

கல்லடி கடற்கரை கடலியற் பூங்கா சுற்றுலா அபிவிருத்தித்திட்டத்தில் 2 உணவகங்கள், 10 விற்பனை நிலையங்கள், 100 இருக்கைகள், சுற்றுலா பிபரயாணிகள் ஓய்வெடுக்கும் 10 கபானாக்கள், சிறுவர் விளையாட்டுத்திடல், கடற்கரைக்கரப்பந்தாட்ட மைதானம், சூரிய மின்கலத்துடனான ஒரு கிலோமீட்டர் ஒளியூட்டல் மற்றும் மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கல்லடிப்பாலம் அருகே 5.375 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீனிசை சிறுவர் பூங்கா இரண்டாம் கட்டமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.