கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகத் தெரிவு.

(சசி துறையூர்)

2017ம் ஆண்டுக்கான வாழைச்சேனை பிரதேச சம்மேளன தெரிவுக் கூட்டமானது கடந்த 2017.03.03ம் திகதி  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ்  தலைமையில் நடைபெற்றது.

 இதன்போது  2017ம் வருடத்திற்கான புதிய நிருவாக தெரிவு இடம்பெற்றது. தலைவராக செல்வன் A.வினோத், செயலாளராக   பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ்   உபசெயலாளராக N.தட்சாயினி, பொருளாளராக A.வாசுதன், உபதலைவராக k.கிரிசாந்தன், அமைப்பாளராக T.சசிகுமார் உப அமைப்பாளராக K.தருமலெட்சுமி ஆகியோர் ஏகமனதாக   தெரிவு செய்யப்பட்டனர்.

பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற
இவ் நிகழ்வில் அதிதிகளாக சுங்கான்கேணி பிள்ளையார் ஆலய பிரதம குரு பவிசர்மா அவர்களும் கோறளை பற்று வாழைச்சேனை பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிரிந்தன், மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி கலாராணி,  பேத்தாழை விபுலானந்தா வித்தியாலய அதிபர் திரு T.சந்திரலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பிரதேசத்தில் உள்ள இளைஞர் கழகங்களின் நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.