மண்முனை மேற்கு பிரதேசத்துக்கான இளைஞர்கழகங்களின் சம்மேளன புதிய நிருவாகத்தெரிவு கூட்டமும் முன்னோடி இளைஞர் கெளரவிப்பு நிகழ்வும்.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர்கழகங்களின் சம்மேளனத்தின் 2017ம் வருடத்திற்கான புதிய நிருவாகத்தெரிவு கூட்டமும்  முன்னோடி இளைஞர் கெளரவிப்பு நிகழ்வும் இன்று 04.03.2017 சனிக்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை அலுவலர் செல்வன் கணேசமூர்த்தி சசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

 காலை  09.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கெளரவ கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச உதவிபிரதேச செயலாளர் S.ராஜ்பாவு, வவுணதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஜானாப் M.நஸீர், மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அலுவலர்(தலைவர் முனைப்பு சிறிலங்கா) மா.சசிகுமார், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணித்தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு  மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு நிருவாகிகளான இ.ரங்கேஸ்வரன், எஸ்.சுசி, தி.தயாநிதி, மு.அருணன், க.கணேசலிங்கம் , விளையாட்டு உத்தியோகஸ்தர் T.பூபாலராஜா மற்றும் சிறுவர் நிதியத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.சதீஸ், எஸ்கோ நிறுவன திட்ட இணைப்பாளர் திருமதி R.கீத்தவேணி ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில்  சிறந்த முன்னோடி இளைஞர் யுவதிகளுக்கான கெளரவிப்பும் புதிய சம்மேளன நிருவாகத்தெரிவும் இடம்பெற்றது.