ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு

(லியோன்)

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான   இரண்டாம் கட்ட செயலமர்வு  மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் (16) வியாழக்கிழமை   நடைபெற்றது


நியுசிலாந்து சயில்ட் பாவுன்ட் நிறுவன நிதி அனுசரணையில்  வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட  தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான ஆரம்பப் பிரிவு   ஆசிரியர்களுக்கான இரண்டாம்  கட்ட  செயலமர்வு  வவுணதீவு அபிவிருத்தி நிறுவன  திட்ட முகாமையாளர் எல் .ஆர் .  டிலிமா தலைமையில் மட்டக்களப்பு  நாவலடி சன்ரைஸ் விடுதியில் நடைபெற்றது

தரம்  ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான இந்த செயலமர்வில்  ஆசிரியர்களின் வினைத்திறன் மிக்க கற்பித்தலை பிள்ளைகளுக்கு ஊக்குவிக்கும்  நோக்கில்  பயிற்சிகள்  வழங்கப்படுகின்றது  

இந்த பயிற்சி செயலமர்வில் இலங்கைக்கான சயில்ட் பாவுன்ட் நிறுவன தேசிய  பணிப்பாளர்   கெத்தரின் மெனிக் , மண்முனை மேற்கு வலய கல்விப் கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் ,வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட  இணைப்பாளர்  ஜெகன் ராஜரட்ணம் , சிறிலங்கா சயில்ட் பாவுன்ட்  எட்லஸ் திட்ட உதவியாளர்   ஆர் .சுஜாதா , வளவாளராக  ஆரம்பக்கல்வி  ஆசிரியர்  திருமதி எம் . தேவதாசன்  மற்றும்  மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட     ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்