தாய் மற்றும் வளர்ப்பு தாய் இருவரும் எதிர் வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல்


(லியோன்)

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தாய் மற்றும் வளர்ப்பு தாய்  இருவரையும் எதிர் வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா மாதர் வீதியில் பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு 04 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தாய் மற்றும் வளர்ப்பு தாய் ஆகிய இருவரையும் எதிர் வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார் 

குறித்த சிறுவனின் மரணம் தொடர்பாக காத்தான்குடி பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் (16) வியாழக்கிழமை  சிறுவனின் தாய் மற்றும் வளர்ப்பு தாய் இருவரும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் .

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் தாய் மற்றும் வளர்ப்பு தாய் ஆகிய இருவரையும் எதிர் வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்  .

இந்நிலையில் சந்தேக நபரான வளர்ப்பு தாய் ஏற்கனவே ஒரு பெண் பிள்ளையினை தத்தெடுத்து வளர்த்து வருகின்ற நிலையில் குறித்த எட்டு வயது பெண்பிள்ளையை சிறுவர் காப்பகத்திற்கு ஒப்படைக்குமாறும் , சந்தேக நபரான வளர்ப்பு தாயின் மனநிலை தொடர்பான வைத்திய அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் .

 .