முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின் கல்வி ஊக்குவிப்பு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று.

(சசி துறையூர்) முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின்
கல்வி ஊக்குவிப்பு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று.

மட்டக்களப்பு முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பின் பாராட்டு நிகழ்வும் , கல்வி ஊக்குவிப்புக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் 03.00மணிக்கு மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் அதன் தலைவர் மாணிக்கபோடி சசிகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில்  கல்வி பொதுத்தராதர உயர்தர பரிட்சையில் திறமைச்சித்தி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட  மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்படுவதுடன் புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு எஸ். மனேகரன் முதன்மை விருந்தினராகா கலந்து  கொள்ளவுள்ளார்.

மேலும் விழா ஒழுங்கமைப்பினை மேற்கொள்ளும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ரி.இன்பராசா தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.