காத்தான்குடி சம்மேளனத்திற்கு தலைவராக ஏ.எப்.எம். சுஹைல் தெரிவு.

(சசி துறையூர்)
கொள்கைத் திட்டமிடல் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டல் ஆலோசனையின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கும்  காத்தான்குடி பிரதேசத்திற்கான பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிருவாகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

கடந்த 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி  பிரதேச செயலகத்தில்  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட 19 இளைஞர் கழகங்களைச்சேர்ந்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் காத்தான்குடி  பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு 2017ம் வருடத்திற்கான  தலைவராக ஏ.எப்.எம். சுஹைல் தெரிவு செய்யப்பட செயலாளராக பதவி வழியாக எம்.எம்.ஸமீலுல் இலாஹி  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நியமிக்கப்பட்டார். பொருளாளராக. எம்.ஜே.எம். சம்ஹான், உப தலைவராக எம்.எம்.எம். றிப்கி,   உப செயலாளராக எம்.ஐ.எம். சிஹாப், அமைப்பாளராக ஐ.எம். ஹறூஸ்  உப அமைப்பாளராக எ.என்.எஸ். ஹிலால் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில்  காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி  மற்றும்  அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.