கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டல் ஆலோசனையின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கும் மண்முனை மேற்கு பிரதேசத்திற்கான பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிருவாகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
கடந்த 04.03.2017 சனிக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட 26 இளைஞர் கழகங்களைச்சேர்ந்த இளைஞர் யுவதிகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு 2017ம் வருடத்திற்கான தலைவராக செல்வன் ரி.விமல்ராஜ் தெரிவு செய்யப்பட செயலாளராக பதவி வழியாக செல்வன் கணேசமூர்த்தி சசீந்திரன் நியமிக்கப்பட்டார். பொருலளராக. R.மயூரன், உபதலைவராக யோ.சூரியகுமார், உபசெயலாளராக செல்வி எஸ்.ஜானுதா, அமைப்பாளராக ரி.றிசாந்தன், உப மைப்பாளராக செல்வி சி.லக்ஷான ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச அரசியல் பிரமுகர்கள், மண்முனை மேற்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி வவுணதீவு பொலிஸ்நிலைய பெறுப்பதிகாரி உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 04.03.2017 சனிக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட 26 இளைஞர் கழகங்களைச்சேர்ந்த இளைஞர் யுவதிகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு 2017ம் வருடத்திற்கான தலைவராக செல்வன் ரி.விமல்ராஜ் தெரிவு செய்யப்பட செயலாளராக பதவி வழியாக செல்வன் கணேசமூர்த்தி சசீந்திரன் நியமிக்கப்பட்டார். பொருலளராக. R.மயூரன், உபதலைவராக யோ.சூரியகுமார், உபசெயலாளராக செல்வி எஸ்.ஜானுதா, அமைப்பாளராக ரி.றிசாந்தன், உப மைப்பாளராக செல்வி சி.லக்ஷான ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச அரசியல் பிரமுகர்கள், மண்முனை மேற்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி வவுணதீவு பொலிஸ்நிலைய பெறுப்பதிகாரி உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.