முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தினால் வாழைச்சேனை கிண்ணையடியில் ஆடை விற்பனை நிலையம் திறந்து வைப்பு.

(சசி துறையூர்) யுத்த நடவடிக்கையினால்
பாதிப்புக்குள்ளான குடும்பத்துக்கு
தலைமை தாங்கும் இளம்தாயின்
வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும்
நோக்கில் பிள்ளையின் கல்வி
நடவடிக்கைகளை மேம்படுத்தும்
நோக்கிலும் முனைப்பின் வாழ்வாதார
செயற்திட்டடத்தின் கீழ்   ஒழுங்குபடுத்தப்பட்ட
ஆடைகள் விற்பனை நிலையம் இன்று
திங்கட்கிழமை திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிண்ணையடியில்
அமைக்கப்பட்டுள்ள இவ் ஆடைகள் விற்பனை
நிலையத்தை முனைப்பின்
ஸ்ரீலங்காத்தலைவர் மாணிக்கப்போடி
சசிகுமார் உத்தியோக பூர்வமாக திறந்து
வைத்து பயனாளியிடம் கையளித்தார்.
நிகழ்வில் முனைப்பின் ஆலோசகர் கே.
புஸ்பராஐா, மண்முனை மேற்கு
விளையாட்டு உத்தியோகஸ்தர்
விஐயகுமார் பூபாலபிள்ளை உட்பட ஊர்
பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.