(லியோன்)
மட்டக்களப்பு
பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் (07) மாலை நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி. சி .எஸ் மகேந்திரன் .தலைமையில் நடைபெற்றது .
விளையாட்டு நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் இரா துறைரெட்ணம், சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி
பணிப்பாளர் எ .சுகுமாரன் , பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எ
.ஜெகநாதன் ,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக சேவைக்கால ஆலோசகர் எம் .உமாபதிசிவம்
பாலமீன்மடு கிராம சேவை உத்தியோகத்தர் டி .நதிகா பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை
ஆசிரியர்கள் ,
மாணவர்கள் , பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் ,கிராம பொது
அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,
அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு
இடம்பெற்றது.
நடைபெற்றவிளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி , மாணவர்களின் உடற்பயிற்சி , வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
பாடசாலையின்
2017ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.