15வது தினமாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 15வது தினமாக இன்றும் தொடர்ந்தவண்ணமுள்ளது.
இன்று காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மரணப்பெட்டியின் முன்பாக நின்று அஞ்சலி செலுத்தியபின் தங்களது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

15நாட்களை தமது போராட்டம் கடந்து நிற்கின்றபோதிலும் அரசாங்க தரப்பில் இருந்துஇதுவரையில் சாதமான கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லையென பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பட்டதாரிகளின் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆதரவுகள் அதிகரித்தவண்ணமுள்ளது.

பொது அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,உயர்கல்வி நிலைய மாணவர்கள்,மாவட்ட ஊடக அமைப்புகள்,சட்டத்தரணி அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவினை வழங்கிவருகின்றது.