மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் தனிமையாக வாழும் குடும்பம் ஒன்றிற்கு சூரியப்படல் மின்விளக்கு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட கறுவாச்சோலை கிராமத்தில் காட்டுப்பகுதியில் தனிமையாக வசித்துவருகின்ற ஒரு தமிழ் குடும்பத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வாசம் உதவும் உறவுகளினால் அக்குடும்பத்திற்கு சூரியபடல் மூலம் ஒளிரும் மின்விளக்குநேற்றுவழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மாகா சபை உறுப்பினர் மற்றும் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் கலந்துகொண்டனர்.

கறுவாச்சோலைகிராமமானதுமட்டக்களப்பின் எல்லைக்கிராமமாகும். இங்கு 1983ம் ஆண்டுகாலப்பகுதியில் 105 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்துவந்துள்ளது. தற்போதுராணிமலரின் குடும்பம் மட்டுமேஅடர்ந்தகாட்டினுள்ளேவாழ்ந்துவருகின்றனர். இவர்கள் அனைத்துஅடிப்படைவசதியையும் இழந்துதன் இனத்துக்காகவாழ்ந்துவரவதாகவும் தெரிவித்தார். 

இவர்களைகடந்தஐந்துமாதங்களுக்குமுன்னர் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஜனா சென்றுசந்தித்துஅவர்களின் தேவைகளைகேட்டறிந்தார்.

அவர்களுக்கு மிக முக்கிய தேவையாக மின்னொளி தேவையினைதெரிவித்தார்கள். அதனைதற்போது வாசம் உதவும் உறவுகள் அமைப்பினூடாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இங்குமுன்னர் வாழ்ந்தகுடும்பங்களைமீள இக்கிராமத்திற்கு கொண்டுவருதலுக்கான ஊக்குவிப்பு செயற்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.