கதிரவன் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டது கொடுவாமடு சன் ஸ்ரார்

(சசி துறையூர்)  கரடியனாறு கதிரவன் இளைஞர் கழகம் வருடாந்தம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் கொடுவாமடு சன்ஸ்ரார் இளைஞர் கழகம் சம்பியனானது. இம்முறை இக் கிறிக்கட் சுற்றுப்போட்டியானது கதிரவன் இளைஞர் கழகத் தலைவர் ம.சுரேஸ்காந் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதனை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கடந்த 12.03.2017. கரடியனாறு பொதுவிளையாட்டு மைதானத்தில் கதிரவன் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த இச் சுற்றுப்போட்டியில் பிரதேசத்தை சேர்ந்த அதிகளவான அணிகள் பங்குபற்றியிருந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கொடுவாமடு சன்ஸ்ரார் அணியினரும் உறுகாமம் இளங்கோ அணியும் ஒன்றைஒன்று எதிர்த்து போட்டியிட்டனர்.

இதில் கொடுவாமடு சன்ஸ்ரார் கழகம்  வெற்றிவாகை சூடி கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.

இறுதிப்போட்டிக்கு அதிதிகளாக இளைஞர்பாராளுமன்ற கல்வி பயிற் மற்றும் தொழில்வழிகாட்டல் அமைச்சர் ம.சுரேஸ்காந்,  மட்/கரடியனாறு மாகாவித்தியாலய அதிபர் திரு ஆர்.செந்தில்நாதன், மட்/ மணிபுரம் வித்தியாலய அதிபர் திரு ரி.கரிகாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.