முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு

(சசி துறையூர்) முல்லைத்தீவு துணுக்காய்
 பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் 11.03.2017 சனிக்கிழமை   முல்லைத்தீவு துணுக்காய்பிரதேச செயலகத்தில்  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தலைமையில் இடம் பெற்றது

இதன் போது முல்லைத்தீவு துணுக்காய்
 பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2017ம் வருடத்திற்கான  நிருவாகத்திற்கு
தலைவர்-த.திவாகர்
செயலாளர் - ஜெ.சுகந்தன்
பொருலாளர் - தெ.கோபினா
அமைப்பாளார் - து.சிந்துஜா
உப தலைவர்-ஜெ.சுஜிதா
உப செயலாளர் - த. சுரேந்தர்
உப அமைப்பாளார்- சூ.கஸ்தூரி
ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.


மேலும் விளையாட்டு குழு செயலாளர் க.தர்மேந்திரன்
கலாச்சார குழு செயலாளர் ஆ.ஜெயசிறி
முயற்சியாண்மை குழு செயலாளர் த.சஞ்சீவன்
ஊடகம் மற்றும் தகவல் குழு செயலாளர்-ம.யசிந்தன்
தேசிய சேவை குழு செயலாளர் அ.தஜீவன்
கல்வி பயிற்சி தொழில் ஆலோசனை மற்றும் வழிநடத்தல்  பிரிவு குழு செயலாளர் சு.திலக்சன்
நிதி குழு செயலாளர் மா.ஜெயக்குமார்
சூழல் பாதுகாப்பு குழு செயலாளர் வை.ரவிவர்மன்
கணக்காளர்  பி.பிபிரசாந் என தெரிவுகளும் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில்  பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.