கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

பெண்கள் சமூகத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பெண்களே மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.

இலங்கை வங்கியின் மட்டக்களப்பு நகரக்கிளையின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் நேற்று மாலை கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வங்கி உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களின் தொழில் முயற்சி தொடர்பான கருத்துப்பகிர்வுகளும் நடைபெற்றதுடன் சமூகத்தில் அரும்பணியாற்றும் பெண்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.