கல்லடி பாலத்தில் குதித்ததாக சந்தேகிக்கப்பட்டவர் வீடு திரும்பினார்

மட்டக்களப்பு,கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்ததாக சந்தேகிக்கப்பட்டவர் வீடுதிரும்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு தட்டார மாரியம்மன் ஆலய வீதியை சேர்ந்த 41வயதுடைய குடும்பஸ்தர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

கல்லடி பழைய பாலத்தில் மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்த குறித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மற்றும் பாதணிகள் கிடப்பதைக்கண்டு மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவித்திருந்ததுடன் அது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவந்ததுடன் மட்டக்களப்பு வாவியிலும் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் குறித்த நபர் கிராண்குளத்தில் நின்றதை அவதானித்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் உறவினர்கள் அவரை அழைத்துவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.