லயன்ஸ் கழக மகளிர் மற்றும் கிறிஸ்தவ வாலிப சங்க மகளிர் பிரிவு மகளிர் தின நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு லயன்ஸ் கழக மகளிர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில்  மகளிர் தின விசேட  நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .


கிராம மட்ட சமூக பொருளாதார அபிவிருத்தியில் சுயதொழில் ஈடுபட்டுள்ள பெண்களை மேம்படுத்தும் நோக்காக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு லயன்ஸ் கழக மகளிர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க மகளிர்  ஒழுங்கமைப்பில்  2017 ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும்  விசேட நிகழ்வு கிறிஸ்தவ வாலிப சங்க  இணக்கசபை உறுப்பினர் எஸ் எஸ்  பாக்கியராஜா தலைமையில்  (28) மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க  மண்டபத்தில் நடைபெற்றது


சர்வதேச மகளிர் தின நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,  லயன்ஸ் கழகத்தின் நிருவாக உறுப்பினர் திருமதி.டாக்டர் ரோஜினி தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர்  மற்றும் மகளிர்பிரிவு பொறுப்பதிகாரி திருமதி.என்.சுசிலா,  கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் தலைவர் ஈ.வி.தர்ஷன் உட்பட இயக்குனர் சபை உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.


இதன் போது அதிதிகளினால் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறந்த சுயதொழில் முயற்சியாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் பெண்களின்  ஆற்றல்களை வெளிபடுத்தும்  பல்வேறு கலை, கலாசார நடன  நிகழ்வுகள் இடம்பெற்றது .


குறித்த நிகழ்வில் கிராம மட்ட சமூக பொருளாதார அபிவிருத்தியில் சுயதொழில் ஈடுபட்டுள்ள பெண்கள் தலைமைதாங்கும்  அங்கத்தவர்கள் ,குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்