புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலேடு வழங்கும் நிகழ்வு

(லியோன்)

2017 ஆண்டு  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களுக்கான செயலேடு  வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய  அதிபர்கள் சங்கத்தின் அனுசரணையில்  2017 ஆண்டு  ஐந்தாம் தர புலமைப்பரிசில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான  கற்றல் திறன்களும் ஆற்றல்களுக்குமான செயலேடு வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு  வலயக் கல்விப் பணிப்பாளர் கே பாஸ்கரன்  தலைமையில் (28) மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது  .

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2017 ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக  மாணவர்களுக்கும் ,பாடசாலை ஆசிரியர்களுக்கும் இந்த செயலேடு வழங்கப்பட்டுள்ளது .


இந்த செயலேடு வழங்கும்  நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்தி பணிப்பாளர் (அலுவலகம்) திருமதி .கங்கேஸ்வரன் , கோட்டக்கல்வி அதிகாரி எ .சுகுமாரன் . வலயக்கல்வி பணிப்பாளர்கள் , மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்கள்,  ஆசிரியர்கள் ,மாணவர்கள்  கலந்து கொண்டனர் .