கூழாவடியில் ரயில் மோதி இளைஞன் படுகாயம்

மட்டக்களப்பு கூழாவடியில் ரயில் மோதி 25வயதுடைய கூழாவடி பகுதி இளைஞர் ஒருவர் படுகாயடைந்துள்ளார்.

இன்று இரவு 8.30மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ரயிலில் மோதுண்டே குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த இளைஞர் தலையில் பாரிய காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.