மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகராக சமன் யட்டவர பதவியேற்பு –மாமாங்க பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாடு

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியகராக சமன் யட்டவர பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கராக கடமையாற்றிய கருணாகரட்ன இடமாற்றம் பெற்றுச்சென்றதை தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய அவர் மட்டக்களப்புக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியகராக கடமையினைப்பொறுப்பேற்கும் அவர் மட்டக்களப்பு மாமாங்ப்பிள்ளையார் இன்று ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

இவரை ஆலய வண்ணக்கமார் வரவேற்றதுடன் விசேட பூஜைகளும் நடாத்தப்பட்டது.இதில் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.