மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவுக்கான கூட்டம் இன்று

(சசி துறையூர்) மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் இன்று 18.03.2017 சனிக்கிழமை மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் மாவட்ட சம்மேளனத் தலைவர் ரி.சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.

பதிநான்கு பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந் நிகழ்வில் அதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜனாப் ஹாலித்தின் ஹமீர் அவர்களும், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி நிசாந்தி அருள்மொழி, திருமதி யே.கலாராணி, நிஸ்கோ கூட்டுறவு சங்கத்தின் முகாமையாளர் ப.கிருபைராசா,
மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.சுரேஸ்காந், அ.தர்ஷிக்கா, கு.துசாந்தன், ஜே.எம். திபாஸ்  கலந்துகொண்டாமை குறிப்பிடத்தக்கது.