தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை

32 நாளாக தொடரும் தமது போராட்டம் தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்தாமையினால் தமது போராட்டத்தினை பாரிய எழுச்சியுடன் நடாத்துவகையில் அனைத்து அமைப்புகளையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 32வது தினமான இன்று வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.

தமது போராட்டம் தொடர்பில் இதுவரையில் மத்திய மாகாண அரசாங்கள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளாமைக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை இந்த அரசாங்கங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினை ஏழுச்சியுடன் வலுப்படுத்தும் வகையிலும் தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களை நடாத்துவம் வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஆதரவு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்தி பூங்கா முன்பாக தினமும் நாங்கள் ஏதாவது நல்ல செய்திவரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்துவரும் நிலையில் தமது எதிர்பார்ப்பு கானல் நீர்போல் சென்றுவிடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது நியாயமான போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் பாராமுகமாக இருந்துவருவதாகவும் தெரிவிக்கும் அவர்கள் அரசாங்கத்திற்கு எதுவித அழுத்தங்களையும் அவர்கள் வழங்காதது கவலையளிப்பதாகவுள்ளதாகவும் தெரிவித்தனர்.