கொட்டும் மழையிலும் தொடரும் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம் -பத்து நாளையும் கடந்து தொடர்கிறது

பத்தாவது நாளாகவும் கொட்டுமழையிலும் மட்டக்களப்பு மாவட்டவேலையற்ற பட்டதாரிகள் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

தமதுகோரிக்கைகள் தொடர்பில் இதுவரையில் எவரும் சாதகமான பதிலையளிக்கவில்லையென தெரிவித்துள்ள பட்டதாரிகள் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.

இதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியர்களினால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழைபெய்தாலும் தமது போராட்டம் வெற்றியளிக்கும் வரையில் தொடரும் என பட்டதாரிகள் தெரிவித்தனர்.