இலங்கை வங்கியின் பணபரிமாற்ற நிலையம் மட்டக்களப்பு விமானப்படை நிலையத்தில் திறந்துவைப்பு

மட்டக்களப்பு விமான நிலையத்தில் இலங்கை வங்கியின் பணபரிமாற்ற பிரிவு (ஏரிஎம்) திறந்துவைக்கப்பட்டது.

விமான நிலையத்திற்கு வரும் உல்லாசப்பயணிகள் மற்றும் பிரதேச மக்களின் நலன் கருதி இந்த பிரிவு திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை வங்கியின் மட்டக்களப்பு நகரக்கிளை முகாமையாளர் எம்.ஐ.நௌபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை வங்கியின் உதவி பொது முகாமையாளர் டி.எம்.கே.எஸ்.திஸநாயக்க, இலங்கை விமானப்படையின் மட்டக்களப்பு கட்டளை அதிகாரி வின்கமான்டர் புத்திக பியசிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு விமான நிலையத்தில் இரண்டாவது விரிவாக்கல் இயந்திரம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.