முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

(சசி துறையூர்) முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
கடந்த 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் செல்வன் க.கோகுலதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது புதிய நிருவாகத்தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மாந்தை கிழக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு அ.ஜெயாளன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைவராக க.சுஜாந் பொருளாளராக வி.விஜயராஜ், அமைப்பாளராக நா.உமேஸ், உபதலைவராக மு.நிரோசன், உபசெயலாளராக க.றொபின்சன் உப அமைப்பாளராக க.கோகுலநாதன்  ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ம.சசிக்குமார், கிராம சேவகர் ம.யோகேசன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஷ்தர் ந.ஜெகதீஸ், துணுக்காய் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி J.சுகந்தன், கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் ந.தேவராசா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.